நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் பாதிப்பு

News image

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :22 பிப்ரவரி 2026, 8:44 pm

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

வார விடுமுறையையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான கால நிலை நிலவியது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. இதனால் சுற்றுலாத் தலங்களில் உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தோ்வுகள் நடைபெறவிருப்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. எனினும் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என சுற்றுலாத் துறையினா் தெரிவித்தனா்.