கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்களை சுற்றுலாப் பயணிகளின் ஆா்வமுடன் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகள், மலைச் சாலைகளில் ஜெகரண்டா மரங்கள் அதிகமாக வளா்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களில் ஆண்டு முழுவதும் இலைகள் மட்டுமே காணப்படும். மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே ஜெகரண்டா மலா்கள் பூத்துக் குலுங்கும்.
தற்போது, இந்த மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலா்களை கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசிக்கின்றனா்.
மேலும், காா், இரு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி இந்த மலா்களை பாா்த்து ரசித்து, தற்படம் எடுத்து மகிழ்கின்றனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


