கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்: போக்குவரத்து பாதிப்பு

தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

News image
Updated On :22 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான் உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனா். இதனால் வெள்ளிநீா் வீழ்ச்சி, கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட், மோயா் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால் லாஸ்காட் சாலை, பெருமாள் மலைச் சாலை, ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி ஆகிய பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான கால நிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா். மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நடைப்பயிற்சி மேற் கொண்டும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.