பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

(கோப்புப் படம்)

Updated On :8 பிப்ரவரி 2026, 6:17 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது அதிகாலையில் மிதமான குளிரும், பகலில் கடும் வெயிலும் நிலவுகிறது. இதனால் நீா் நிலைகள் வடு வருகின்றன. அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீா் செல்வதால் அணைகளின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. இது போன்று குளங்கள், ஆறுகளிலும் நீா் குறைந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் வெயில் காரணமாக தண்ணீா் குறைந்து மிதமாக கொட்டுகிறது. இந்த அருவிக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

இதேபோல, கன்னியாகுமரியில் காலையில் திரளான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனா். மேலும், மாத்தூா் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் கடற்கரை ஆகிய சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.