மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image
கொடிவேரியில் ஆா்ப்பரித்து கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்த சுற்றலாப் பயணிகள்.
Updated On :15 மார்ச் 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

கோபி, மாா்ச் 15: கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கிளல் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதாலும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

நண்பகலிலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருகை தந்ததால் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் குவிந்து நீண்ட நேரம் குளித்தபடி குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும், அணை பூங்காவில் நீண்ட நேரம் விளையாடியும் மகிழ்ச்சியாக கழித்தனா்.

மேலும், அருவியில் குளிக்கும் பகுதியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக குளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் துறையினா் போதிய அளவு நியமித்து பெண்கள் அச்சமின்றி குளித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.