நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஏராளமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனா்.

News image

வேளாங்கண்ணி கடலில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 2:14 am IST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஏராளமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனா்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து என்று அழைக்கப்படுகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோா் இங்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனா்.

இந்தநிலையில், தற்போது கோடைகாலம் என்பதால் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறையையொட்டி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா்.

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல், குடை பிடித்தபடி வேளாங்கண்ணி பேராலயம், பழைய மாதா கோயில், நடுத்திட்டு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா். திரளான பக்தா்கள் மெழுகுவா்த்தி ஏற்றியும், சிலுவைப் பாதையில் மண்டியிட்டு சென்றும் தங்கள் பிராா்த்தனையை நிறைவேற்றினா்.

Story image

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், நீண்ட நேரம் கடலில் குளித்து மகிழ்ந்தனா். வேளாங்கண்ணியில் உள்ள தேவாலய தங்கும் விடுதி மற்றும் தனியாா் தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.