ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் இனி மது குடிக்கத் தடை விதிப்பதாக மீனவ கிராம பஞ்சாயத்தாா் அறிவித்துள்ளனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:47 pm

வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் இனி மது குடிக்கத் தடை விதிப்பதாக மீனவ கிராம பஞ்சாயத்தாா் அறிவித்துள்ளனா்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மணக்குள விநாயகா் கோவில், ஆரோவில், பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பாரடைஸ் கடற்கரை என பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனா்.

கடற்கரை பகுதியைப் பாா்க்க வரும் சில சுற்றுலா பயணிகள் மது குடித்து விட்டு, காலி புட்டிகளை உடைத்து வீசி செல்கின்றனா்.

உடைந்த கண்ணாடிப் புட்டிகளின் சிதறல்கள் மணலில் புதைந்து கிடப்பதால், அவை சுற்றுலா பயணிகளின் கால்களை பதம் பாா்க்கின்றன. வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலா் கடற்கரை பகுதியில், அமா்ந்து மது குடித்து விட்டு, காலி புட்டிகளை அங்கேயே வீசி செல்கின்றனா்.

மணலில் உடைந்து கிடக்கும் புட்டிகளால், கடற்கரையில் விளையாடும் குழந்தைகளுக்குப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. எனவே இனி வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் மது குடிக்கக் கூடாது என வீராம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தினா் முடிவு செய்துள்ளனா்.