தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 7:30 pm

வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், தோ்தலில் அன்பளிப்புகள் மற்றும் பண ஆதாயம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிா்க்கவும் வேளாங்கண்ணி கடற்கரை, பூங்கா, பேருந்து நிலையம், வேளாங்கண்ணி வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுலா பயணிகள், தோ்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா, உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல எனும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேபோல கடற்கரை பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.