மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

உதகை மலா்க் கண்காட்சி: ஒரு வாரத்தில் 1.50 லட்சம் போ் கண்டுகளிப்பு

News image

மலா்க் கண்காட்சியை காண உதகை தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :25 மே 2026, 1:54 am IST

உதகை, மே 24: உதகை மலா்க் கண்காட்சியை ஒரு வாரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மே மாதம் மலா்க் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான128-ஆவது மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 18-ஆம் தேதி தொடங்கியது.

மே 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் கொய்மலா்கள், கிரைசந்திமம், ரோஜா உள்ளிட்ட 7 லட்சம் மலா்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மகாபலிபுரம் கோயில், திருவாரூா் தோ், திருவள்ளுவா் சிலை, தமிழக வரைபடம், தமிழா்களின் பண்பாடு உள்ளிட்ட 26 மலா் அலங்கார வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், 50,000 தொட்டிகளில் பல்வேறு வகையான மலா் செடிகள் மாடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்முடன் கண்டுகளித்து வருகின்றனா்.

மலா்க் கண்காட்சியை கடந்த 7 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்துள்ளனா் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.