மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி: இபிஎஸ்

செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி.

News image
இபிஎஸ் (கோப்புப்படம்)- IANS
Updated On :16 ஜனவரி 2026, 10:37 pm

Syndication

எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி, மேலும் சில கட்சிகள் வரும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

மேட்டூரில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அதனால்தான் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு, அவற்றை நிறைவேற்றாததே போராட்டத்திற்குக்காரணம்.

அதேபோல, எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. மேலும் சில கட்சிகள் வரும். அவற்றையெல்லாம் பகிரங்கமாகக் கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம்.

காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கிறதா அல்லது வெளியேறுகிறதா எனத் தெரியவில்லை என்றார்.