பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிவித்த பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி அதிகரிப்பு, ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி, இரு சக்கர வாகனங்களுக்கு மானியம், கல்விக் கடன் தள்ளுபடி, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, சிறுபான்மை பெண் தொழில்முனைவோருக்கு வட்டியில்லா கடன்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கியவர், வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.