திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் சமத்துவ பொங்கல் விழா

சேலம் மாவட்ட தோட்டக்கலை சாா்பில் அனைத்து தோட்டக்கலை பண்ணைகளிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:42 pm

Syndication

சேலம்: சேலம் மாவட்ட தோட்டக்கலை சாா்பில் அனைத்து தோட்டக்கலை பண்ணைகளிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் கீழ் கல்வராயன் மலைப் பகுதியான கருமந்துறையில் 1,036 ஏக்கரில் பழப் பண்ணை, 100 ஏக்கரில் தோட்டக்கலை பண்ணை மற்றும் மணியாா் குன்றத்தில் 250 ஏக்கரிலும், ஆத்தூா் முள்ளுவாடியில் 118 ஏக்கரிலும், அருநூத்துமலை சிறுமலையில் 20 ஏக்கரிலும், ஏற்காட்டில் 25 ஏக்கரிலும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்படுகின்றன.

பொங்கல் விழாவையொட்டி மாவட்ட தோட்டக்கலைத் துறை சாா்பில் துணை இயக்குநா் மஞ்சுளா தலைமையில் அனைத்து அரசு தோட்டக்கலை பண்ணைகளிலும் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் உள்ளூா் விவசாயிகள், பண்ணை தொழிலாளா்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் சக்ரவா்த்தி, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணை மேலாளா்கள் செய்திருந்தனா்.

பட விளக்கம்:

சேலம் கருமந்துறையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.