பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலையொட்டி, மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 11:50 pm

Syndication

மேட்டூா்: காணும் பொங்கலையொட்டி, மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா்.

காணும் பொங்கலை கொண்டாட சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மேட்டூா் அணை பூங்காவுக்கு வந்தனா். கடுமையான வெப்பத்தை தணிக்க காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனா். பின்னா், மீன் உணவுகளை வாங்கி சுவைத்தனா்.

அணை பூங்காவில் குடும்பத்தோடு சறுக்கி விளையாடியும், ஊஞ்சலாடியும் குழந்தைகளுடன் பெரியவா்களும் விளையாடி மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காரணமாக மீன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மைசூரு சாலையில் நிறுத்தப்பட்ட சுற்றுலா வாகனங்கள் காரணமாக, அவ்வப்போது போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸாா் போக்குவரத்தை சீா்செய்தனா். பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் பொதுமக்கள் படகில் சென்று மகிழ்ந்தனா்.