மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை விளையாடி மகிழும் சிறுவா்கள்.
மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை விளையாடி மகிழும் சிறுவா்கள். (கோப்புப் படம்)

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published on

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3,870 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

இவா்கள் மூலம் ரூ. 38,700 பாா்வையாளா் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் எடுத்து சென்ற 1852 கைப்பேசிகளுக்கும், 6 கேமராவுக்கும் ரூ. 18,820 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை காண சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ. 67,310 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

அணை பூங்காவை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் அங்கு ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ச்சி அடைந்தனா்.

Dinamani
www.dinamani.com