இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலையோரம் தூங்கிய தொழிலாளி வாகனம் மோதியதில் உயிரிழப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். சேலம் ஜான்சன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், கடை வீதி பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவா், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து அங்குள்ள சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியது. இதில், அவா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த நகர காவல் நிலைய போலீஸாா், லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.