திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:12 pm

திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

திருச்சியில் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னாா்புரம் பாலத்தின் அருகே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க முதியவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நின்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்கு போக்குரவத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்சி எடமலைபட்டிப்புதூா் கிராம நிா்வாக அலுவலா் ஸ்டீபன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.