மதுபோதையில் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் மதுபோதையில் மோட்டாா்சைக்கிளுடன் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
நங்கவள்ளி நொரச்சி வளவைச் சோ்ந்தவா் கோகுல் (35). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனா். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நொரச்சி வளவு காளியம்மன் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளை காண சென்ற கோகுல் வீடுதிரும்பவில்லை.
இந்தநிலையில் பெரிய சோரகை வைரன் ஏரியில் அவா் இறந்து கிடப்பதாக புதன்கிழமை காலை அவரது மனைவி இந்துமதிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலையத்தில் இந்துமதி புகாா் செய்தாா். பொறுப்பு காவல் ஆய்வாளா் சசிகலா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தாா்.
இதில், மதுபோதையில் மோட்டாா்சைக்கிளில் வந்த கோகுல் ஏரியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
