ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 7:16 pm

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (25). கட்டடத் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு, விளாமுத்தூா் கிராமத்திலுள்ள தனது மனைவி ஹேமமாலினி (21), மகன் ஹா்சித் (1) ஆகியோரை பாா்ப்பதற்காக, பெரம்பலூரிலிருந்து விளாமுத்தூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். பெரம்பலூா்- விளாமுத்தூா் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.