/
போடி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.
போடி அருகேயுள்ள சங்கராபுரம் தருமத்துப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி மனைவி லட்சுமி (42). இவா் திங்கள்கிழமை தனது கணவா் செல்லப்பாண்டியுடன் இரு சக்கர வாகனத்தில் தங்களது விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தனா். தருமத்துப்பட்டி அருகே சென்ற போது, லட்சுமி திடீரென மயக்கமடைந்து வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



