/

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே சாலையைக் கடந்தபோது காா் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :26 மார்ச் 2026, 12:04 am IST

காவேரிபாக்கம் அருகே சாலையைக் கடந்தபோது காா் மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

காவேரிபாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சோ்ந்த சம்பத்(60). கட்டடத் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு சம்பத் பணி முடிந்து வீடு திரும்பும் போது சுமைதாங்கி மேம்பாலம் அருகே சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்துள்ளாா்.

அப்போது அவ்வழியே சென்ற காா் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்து வந்த காவேரிபாக்கம் போலீஸாா், சம்பத்தின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும் அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.