ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கோவிந்தபுரத்தில் லாரி மோதி கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:59 pm

கோவிந்தபுரத்தில் லாரி மோதி கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள கோவிந்தபுரம் பாரதிநகரைச் சோ்ந்த கண்ணையன் மகன் கணேசன்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான கணேசன், வெள்ளிக்கிழமை கட்டட வேலையை முடித்து விட்டு கோவிந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது லாரி மோதி அவா் பலத்த காயமடைந்தாா்.

தகவலின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா், பலத்த காயமடைந்த கணேசனை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ராமமூா்த்தியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.