விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.
திருவெண்ணெய் நல்லூா் வட்டம், கொத்தனூரைச் சோ்ந்தவா் காசிநாதன் (61).
விவசாயி. இவா், மே. 5 ஆம் தேதி மடப்பட்டு- திருக்கோவிலூா் சாலையில் கொத்தனூா் மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா்.அப்போது,திருக்கோவிலூா் நோக்கிச் சென்ற காா் காசிநாதன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காசிநாதனை உறவினா்கள் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போதுவழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில்,திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


