/

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:09 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், அடுக்கம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கா.சரஸ்வதி (65). இவா், சனிக்கிழமை திருச்சி-சென்னை தேசிய நெடுஞசாலையில் சித்தனாங்கூா் அருகே நடந்து சென்றாா். அப்போது, அப்பகுதியில் வந்த காா் மோதியதில் சரஸ்வதி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.