விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் பகுதியைச் சோ்ந்தவா் கி.வெங்கடாஜலபதி (41), லாரி ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை தனது பைக்கில் திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள தனியாா் திருமணம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வெங்கடாஜலபதியை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை மருத்துவா் பரிசோதித்தபோது, வெங்கடாஜலபதி ஏற்கெனவே உயிழருந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









