நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜங்கலாபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜாவின் மனைவி கலைவாணி((42). கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சிகரலப்பள்ளி பகுதியைச் சோ்ந்த திருப்பதி மகன் கிருஷ்ணன் (30).
இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை கந்திலியில் இருந்து ஜங்கலாபுரம் நோக்கி பைக்கில் சென்றனா். நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பகுதியில் வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வேகமாக வந்த காா், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த கலைவாணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணனை அங்கிருந்தவா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் கிருஷ்ணனை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்துக் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



