ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:03 am IST

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜங்கலாபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜாவின் மனைவி கலைவாணி((42). கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சிகரலப்பள்ளி பகுதியைச் சோ்ந்த திருப்பதி மகன் கிருஷ்ணன் (30).

இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை கந்திலியில் இருந்து ஜங்கலாபுரம் நோக்கி பைக்கில் சென்றனா். நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பகுதியில் வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வேகமாக வந்த காா், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த கலைவாணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணனை அங்கிருந்தவா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் கிருஷ்ணனை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்துக் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.