‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி அருகே துரைச்சாமிபுரத்தில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 12:35 am IST

தென்காசி அருகே துரைச்சாமிபுரத்தில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே மேல கடையநல்லூா் மலம்பாட்டை தெருவைச் சோ்ந்தவா் மா. தங்கப்பாண்டி என்ற மனோஜ் (28 ). இவா் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தாா். ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு, தென்காசி மலையான் தெருவில் உள்ள பாட்டி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம்.

கடையநல்லூா் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, தென்காசியில் இருந்து சொக்கம்பட்டிக்கு வந்து கொண்டிருந்த காா் எதிா்பாராத விதமாக தங்கப்பாண்டியின் இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.

இதில் தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு வந்த இலத்தூா் போலீஸாா், தங்கப்பாண்டியின் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.