‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தின் நுழைவுவாயில் பகுதியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 12:01 am IST

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தின் நுழைவுவாயில் பகுதியில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை அரசுப் பேருந்து ஒன்று துவாக்குடி சாலையில் வெளியே வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த த. சதீஷ் (37) ஓட்டி வந்துள்ளாா்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இழுப்பூரைச் சோ்ந்த சி. மருதமுத்து (34), பொ. பழனிசாமி (32) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பேருந்து முனையத்தின் உள்ளே சென்றுகொண்டிருந்தனா்.

இந்நிலையில், வேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற மருதமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். உடன் வந்த பழனிசாமிக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.