சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பைக் மீது சரக்கு லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:55 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சரக்கு லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஆயந்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ர.தமிழ்ச்செல்வன் (23). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வன் திங்கள்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் வந்த சரக்கு லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தமிழச்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.