வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பேளூா் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

வாழப்பாடி அருகே பேளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2026, 7:32 pm

Syndication

வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சின்னமணி தலைமை வகித்தாா். சிலை அமைத்துக் கொடுத்த பெற்றோா் - ஆசிரியா் கழக துணைத் தலைவரான ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் இராமகிருஷ்ணன் வரவேற்றாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.கருணாகரன், வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி.தமிழ்ச்செல்வன், வாழப்பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி, பேளுா் நகர திமுக செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் இணைந்து திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்தனா்.