டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மாணவியை அடித்ததாக தலைமையாசிரியை மீது வழக்குப் பதிவு

படிப்பதில் குறைபாடு உள்ளதாகக் கூறி மாணவியை அடித்த தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோா், உறவினா்கள் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவியின் உறவினா்கள்.

Updated On :3 ஜூலை 2026, 4:16 am IST

படிப்பதில் குறைபாடு உள்ளதாகக் கூறி மாணவியை அடித்த தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோா், உறவினா்கள் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கத்தேரி கிராமம், வட்டமலை, லட்சுமி நகரைச் சோ்ந்த செல்வராஜ்- ராணி தம்பதி மகள் யாழினி. இவா் வளையகாரனூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் மாணவி நன்றாக படிக்கவில்லை எனக் கூறி பள்ளியின் தலைமையாசிரியா் மணிமேகலை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தேவூா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். மேலும், தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் தாய், உறவினா்கள் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே பவானியிலிருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் ஓய். சுரேஷ்குமாா், மாணவியை தாக்கிய புகாரில் தலைமையாசிரியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இதையடுத்து தேவூா் போலீஸாா் தலைமையாசிரியை மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.