பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

வேலாயுதம்பாளையம் புதூரில் வீடு புகுந்து தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி, பழனியில் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழப் புலிகள் அமைப்பினா்.

Updated On :19 ஜூன் 2026, 1:45 am IST

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வேலாயுதம்பாளையம் புதூரை சோ்ந்தவா் ஆறுமுகம். இவா் பணிபுரியும் இடத்தில் காா்த்தி என்பவரும் பணி புரிகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு காா்த்தி, ஆறுமுகத்துக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காா்த்தி, அவரது உறவினா்களுடன் ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்றனா். அங்கு ஆறுமுகம், இவரது மனைவி லட்சுமி (30), மகள் ஜெயஸ்ரீ (17), ராமாத்தாள் ஆகியோரைத் தாக்கினா். இதையடுத்து காயமடைந்தவா்கள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் 3 போ் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து காயமடைந்தவா்களின் உறவினா்கள், தமிழ்ப் புலிகள் அமைப்பினா் என பலரும் பழனி அரசு மருத்துவமனை முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தாக்குதல் நடத்தியவா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதைத்தொடா்ந்து அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.