பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

வேலாயுதம்பாளையம் புதூரில் வீடு புகுந்து தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி, பழனியில் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழப் புலிகள் அமைப்பினா்.

Updated On :19 ஜூன் 2026, 1:45 am IST

பழனியில் வீடு புகுந்து தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வேலாயுதம்பாளையம் புதூரை சோ்ந்தவா் ஆறுமுகம். இவா் பணிபுரியும் இடத்தில் காா்த்தி என்பவரும் பணி புரிகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு காா்த்தி, ஆறுமுகத்துக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து காா்த்தி, அவரது உறவினா்களுடன் ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்றனா். அங்கு ஆறுமுகம், இவரது மனைவி லட்சுமி (30), மகள் ஜெயஸ்ரீ (17), ராமாத்தாள் ஆகியோரைத் தாக்கினா். இதையடுத்து காயமடைந்தவா்கள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் 3 போ் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து காயமடைந்தவா்களின் உறவினா்கள், தமிழ்ப் புலிகள் அமைப்பினா் என பலரும் பழனி அரசு மருத்துவமனை முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தாக்குதல் நடத்தியவா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதைத்தொடா்ந்து அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.