களியக்காவிளை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே மீனச்சல் குந்நுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பேபிகுமாா் மகள் கீது (27). இவா், தனது மூன்று மாத குழந்தையுடன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், கீதுவின் கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி, குழந்தையின் கையில் அணிந்திருந்த அரை பவுன் கைச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றாராம்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாா்த்தாண்டம் உள்கோட்ட துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், களியக்காவிளை காவல் ஆய்வாளா் பரமேஸ்வரன், உதவி ஆய்வாளா் மகேந்த் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், புல்லந்தேரி, அயிந்திதோட்டம் புத்தன்வீட்டைச் சோ்ந்த சிமிகுட்டன் (40) என்பவா் இத்திருட்டி ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் மீட்டனா்.





