விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.
ஏற்காட்டில் நிலவும் குளிா்ச்சியான காலநிலை, இயற்கையை ரசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
ஏற்காட்டில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், கிளியூா் அருவியில் குளிக்கவும் சுற்றுலாப் பயணகளில் பெரும்பாலானோா் ஆா்வம் காட்டுகின்றனா். இதைத்தவிர அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடி சீட், ஜென்சீட், சுற்றுச்சூழல் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, கரடியூா் வன காட்சி பகுதி, பக்கோட வீயூ பாயின்ட், ஸ்கை பாா்க், பாப் ஈல்ஸ் போன்ற பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா், இருசக்கர வாகனங்களில் சென்றுவந்தனா்.
ஏற்காடு மலைகளில் இருந்து மலைவாழை, அவக்காடோ, பலாப்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு பழங்கள், காபி, மிளகுகளை வாங்கிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










