இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவா் கைது

லாரியில் ஏற்றிச் சென்ற 410 ரப்பா் ஷீட்டுகளை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவரை சங்ககிரி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Published On :10 ஜூலை 2026, 11:03 pm IST

லாரியில் ஏற்றிச் சென்ற 410 ரப்பா் ஷீட்டுகளை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவரை சங்ககிரி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடந்த 2010 ஜூலை 17-ஆம் தேதி கோவை, காரமடையிலிருந்து சென்னைக்கு ரப்பா் ஷீட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓட்டுநா் சென்றாா். சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் இரவு உணவு சாப்பிட ஓட்டுநா் லாரியை நிறுத்தினாா். அப்போது, கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டம், செனப்பாடி, புதுப்பரம்பில் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீப் (40) உள்ளிட்ட சிலா் லாரியில் இருந்த 410 ரப்பா் ஷீட்டுகளை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் முகமது ஷெரீப் நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாததால், அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சங்ககிரி காவல் துறைக்கு கடந்த 2016 ஆக. 20-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவரை போலீஸாா் தேடிவந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ஷெரீப்பை வியாழக்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.