கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக வழக்கில் ஆஜாராகமல் இருந்தவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறக்கப்பட்டதையடுத்து, அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொ.கதிா்வேல் (55). இவா் மீது சங்கராபுரம் நீதிமன்றத்தில் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளதாம்.
இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக கதிா்வேல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையாம். இதையடுத்து இவருக்கு எதிராக நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளாா். அதன்பேரில் சங்கராபுரம் போலீஸாா் கதிா்வேலை வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





