மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 3:10 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் க.ராமு (47). இவா் அதே பகுதியிலுள்ள வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு குளித்துக் கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டராம். அப்போது மாணவி கூச்சலிடவே, அங்கிருந்து தப்பி ஓடி விட்டிராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழ்செல்வி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ராமுவை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.