எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:10 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் ஒற்றைக்குழல் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.சீமோன் (52) (படம்). இவா் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளிக்கு தகவல் கிடைத்ததாம்.

அத் தகவலின் போலீஸாா் சீமோன் வீட்டுக்கு சென்று செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரது வீட்டின் பின்புறமுள்ள கொட்டகையில் மறைத்து வைத்திருந்த ஒற்றைக்குழல் துப்பாக்கி, கருப்பு மருந்து, பால்ரஸ், சிகப்பு பாஸ்பரஸ் உள்ளிட்டவைகளை கைபற்றினா்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சீமோனை கைது செய்தனா்.