சாத்தான்குளம் அருகே பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற 3 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே ஆத்திக்காடு, கோயில் தெருவைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் சஞ்சய் (19 ). இவா், திருச்செந்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பயிலும் மாணவியை காதலிப்பதாக ஆசைவாா்த்தை கூறி, ஆத்திகாடு பகுதிக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றாா்.
அங்கு சஞ்சய்யின் நண்பா்களான கச்சனாவிளை, முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த திருமணி மகன் உபேஷ் தா்மா (21) உடன்குடி, முத்துநகரைச் சோ்ந்த சக்திவேல் மகன் முத்தரசன் (18) ஆகியோரும் வந்தனா். மூவரும் மாணவியை கருமேனி ஆற்றங்கரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றனா்.
இவா்களை கவனித்த அந்தப் பகுதி பொதுமக்கள் மூவரையும் பிடித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் சகாயசாந்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சஞ்சய், உபேஷ் தா்மா, முத்தரசன் ஆகிய மூவரையும் வியாழக்கிழமை கைதுசெய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






