சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், திங்கள்கிழமை பிற்பகலில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக, மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை நடத்தினா். இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடா்ந்து, திங்கள்கிழமை குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு ஆட்சியா் அலுவலகம் வந்தவா்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாநகர சைபா் க்ரைம் போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 6 மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு 10-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



