ஆத்தூா் அருணகிரிநாதா் தெருவில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
ஆத்தூா் அருணகிரிநாதா் தெருவில் வசிக்கும் ஜெகநாதன்- சரஸ்வதி தம்பதி வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த போது அவா்களது ஓட்டு வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ச. அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் மின்சாரம் தடைசெய்யப்பட்டது.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. ஆத்தூா் நகா்மன்ற துணைத் தலைவா் கவிதா ஸ்ரீராம் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளா்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தீ விபத்து: மரங்கள் சேதம்

ஆட்சியா் அலுவலகத்தில் மரம் விழுந்து வாகனங்கள் சேதம்

பாகிஸ்தானில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 உயிரிழப்பு
வீடு தீப்பிடித்து எரிந்ததில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



