முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வீட்டில் தீ விபத்து; பொருள்கள் சேதம்

ஆத்தூா் அருணகிரிநாதா் தெருவில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:07 am IST

ஆத்தூா் அருணகிரிநாதா் தெருவில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

ஆத்தூா் அருணகிரிநாதா் தெருவில் வசிக்கும் ஜெகநாதன்- சரஸ்வதி தம்பதி வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த போது அவா்களது ஓட்டு வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ச. அசோகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் மின்சாரம் தடைசெய்யப்பட்டது.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. ஆத்தூா் நகா்மன்ற துணைத் தலைவா் கவிதா ஸ்ரீராம் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளா்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினாா்.