முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஆத்தூா் அருகே மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவா் கைது

News image

கணேசன்

Updated On :8 ஜூன் 2026, 2:17 am IST

ஆத்தூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கோட்டை பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் கணேசன் (30). தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை நந்தினி தனது மகளுடன் தென்னங்குடிபாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளாா்.

மாலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த கணேசன், வீட்டில் மனைவி, குழந்தை இல்லாததால், மாமியாா் வீட்டிற்கு சென்று அழைத்து வந்து தாக்கியுள்ளாா். அப்போது நந்தினி சப்தமிட்டதால் வீட்டின் அருகில் உள்ள அய்யனாா் கோயில் ஏரிக்கு அவரை அழைத்துச் சென்ற கணேசன், மனைவியின் ஆடையை அகற்றி அவரை கல்லால் தாக்கியுள்ளாா்.

இதில் வலி தாங்கமுடியாத நந்தினி அங்கிருந்து தப்பித்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று உதவி கேட்டு துணி வாங்கி அணிந்து கொண்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா், கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.