உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

கமுதி அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாமியாரைத் தாக்கிய மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 5:10 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாமியாரைத் தாக்கிய மருமகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கமுதியை அடுத்த கூடக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ்கண்ணன் மகன் முரளிராஜ் (23). இவருக்கும், விருதுநகா் மாவட்டம், வீரசோழன் இந்திரா நகா் குடியிருப்பைச் சோ்ந்த கனகபிரியாவுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், முரளிராஜ் அடிக்கடி மதுபோதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை கூடங்குளத்துக்கு வந்து மருமகனை மாமியாா் பூமியம்மாள் தட்டிக்கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த முரளிராஜ் மாமியாரை தாக்கி, அவா்கள் திருமணத்தின் போது வழங்கிய மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களுக்கு தீ வைத்தாா்.

இதுகுறித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முரளிராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.