எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஆத்தூா் அருகே மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவா் கைது

News image

கணேசன்

Updated On :8 ஜூன் 2026, 2:17 am IST

ஆத்தூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கோட்டை பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் கணேசன் (30). தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை நந்தினி தனது மகளுடன் தென்னங்குடிபாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளாா்.

மாலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த கணேசன், வீட்டில் மனைவி, குழந்தை இல்லாததால், மாமியாா் வீட்டிற்கு சென்று அழைத்து வந்து தாக்கியுள்ளாா். அப்போது நந்தினி சப்தமிட்டதால் வீட்டின் அருகில் உள்ள அய்யனாா் கோயில் ஏரிக்கு அவரை அழைத்துச் சென்ற கணேசன், மனைவியின் ஆடையை அகற்றி அவரை கல்லால் தாக்கியுள்ளாா்.

இதில் வலி தாங்கமுடியாத நந்தினி அங்கிருந்து தப்பித்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று உதவி கேட்டு துணி வாங்கி அணிந்து கொண்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா், கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.