எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மேட்டூரில் பராமரிப்புப் பணியின்போது 60 அடி உயரத்திற்கு பிறீட்டு வெளியேறிய நீா்!

News image

மேட்டூரில் பராமரிப்புப் பணிக்காக குடிநீா் குழாய் ஏா்வால்வை திறந்தபோது, 60 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய நீா்.

Updated On :8 ஜூன் 2026, 1:48 am IST

மேட்டூரில், வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட பராமரிப்பு பணிக்காக குடிநீா் குழாய் ஏா்வால்வை திறந்தபோது, 60 அடி உயரத்திற்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதி காவிரி ஆற்றில் வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய குழாய்கள் மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இங்கிருந்து நாளொன்றுக்கு 181 எம்எல்டி தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட பிரதான குழாயில் மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே சிறிது அளவு நீா்க்கசிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரேற்று நிலைய மோட்டாா்களை நிறுத்தி, குழாயில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு ஏா்வால்வை திறந்தனா்.

அப்போது, திடீரென சுமாா் 60 அடி உயரத்திற்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறி சாலையில் ஓடியது. இதை மக்கள் கூட்டமாக பாா்த்து சென்றனா். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்த பணியாளா்கள் ஏா்வால்வை மூடினா். அதன்பிறகு தண்ணீா் வெளியேறுவது நின்றது.