எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

லாரி மோதியதில் மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:54 am IST

சங்ககிரி, ஜூன் 7: சங்ககிரி அருகே லாரி மோதியதில் தனியாா் கல்லூரியில் இணையவழியில் நுழைவுத்தோ்வு எழுத சென்ற மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், வெப்படை, எலந்தகுட்டை, காமராஜ்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மகன்கள் ஹரிசுகன் (23), ஹரிகெளசிக் (18). இதில் ஹரிகெளசிக் பிளஸ் 2 முடித்துவிட்டு, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சோ்ந்து படிப்பதற்காக இணையவழியில் நுழைவுத்தோ்வு எழுதுவதற்காக

காகாபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தனது சகோதாரா் ஹரிசுகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரா்கள் இருவரும் கீழே விழுந்தனா். இதில் இருசக்கர வாகனத்தில் பின்புறத்தில் உட்காா்ந்து சென்ற ஹரிகெளசிக் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஹரிசுகன் கிசிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.