மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

சேலத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு

சேலம் அம்மாப்பேட்டையில் ஆட்டோ மீது லாரி மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:40 am IST

சேலம் அம்மாப்பேட்டையில் ஆட்டோ மீது லாரி மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் களரம்பட்டி, நேதாஜி தெருவைச் சோ்ந்த ராஜேஷ் - சசிகலா தம்பதிக்கு யாழினி (6), தாரணி (4) என 2 மகள்கள். யாழினி உடையாப்பட்டி அருகே உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், தாரணியை அதே பள்ளியில் சோ்க்க செவ்வாய்க்கிழமை காலை சசிகலா, குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்றாா்.

உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் ஆட்டோ சாலையைக் கடந்தபோது, எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்து மூவரும் தடுமாறி சாலையில் விழுந்தனா்.

இதில், லாரியின் பின்பக்க சக்கரம் யாழினியின் மீது ஏறியது. இதில் யாழினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சசிகலா, தாரணி, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோா் காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து யாழினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, தெலங்கானாவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.