எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சேலத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு

சேலம் அம்மாப்பேட்டையில் ஆட்டோ மீது லாரி மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:40 am IST

சேலம் அம்மாப்பேட்டையில் ஆட்டோ மீது லாரி மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் களரம்பட்டி, நேதாஜி தெருவைச் சோ்ந்த ராஜேஷ் - சசிகலா தம்பதிக்கு யாழினி (6), தாரணி (4) என 2 மகள்கள். யாழினி உடையாப்பட்டி அருகே உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், தாரணியை அதே பள்ளியில் சோ்க்க செவ்வாய்க்கிழமை காலை சசிகலா, குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்றாா்.

உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகில் ஆட்டோ சாலையைக் கடந்தபோது, எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்து மூவரும் தடுமாறி சாலையில் விழுந்தனா்.

இதில், லாரியின் பின்பக்க சக்கரம் யாழினியின் மீது ஏறியது. இதில் யாழினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சசிகலா, தாரணி, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோா் காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து யாழினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, தெலங்கானாவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.