வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தலைவாசல் அருகே ஒன்றரை வயது மகனை கொன்ற இளம்பெண் கைது

தலைவாசல் அருகே ஒன்றரை வயது மகனை கொன்ற இளம்பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

லலிதா

Updated On :14 ஜூன் 2026, 3:24 am IST

தலைவாசல் அருகே ஒன்றரை வயது மகனை கொன்ற இளம்பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா் கிராமத்தைச் சோ்ந்த லலிதாவுக்கும் (27), அருகில் உள்ள வரகூரைச் சோ்ந்த திருமலைவாசுதேவன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்களுக்கு தா்ஷன்ராஜ் (5), ஒன்றரை வயதில் புவன்ராஜ் என இரு மகன்கள் இருந்தனா்.

லலிதாவுக்கும், புவன்ராஜுக்கும் வலிப்பு நோய் இருந்ததால், அதற்கு இருவரும் மருந்து எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த ஏப். 11-ஆம் தேதி புவன்ராஜுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை சிறுவாச்சூா் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கும் கொண்டுசென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த புவன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளா் பூா்ணிமா வழக்குப் பதிவுசெய்து குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு லலிதாவை காணவில்லை என அவரது தாய் செல்லம்மாள் தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதில், போலீஸாருக்கு சந்தேகம் வந்ததால் விசாரணை நடத்தினா்.

அப்போது, லலிதாவின் கணவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மூத்த மகன் தா்ஷன்ராஜை அழைத்துச் சென்றுள்ளாா். இதனால் மனமுடைந்த லலிதா வேறு திருமணம் செய்ய இடையூறாக இருந்த புவன்ராஜை கொலை செய்து, ஆத்தூரை அடுத்த சீலியம்பட்டியைச் சோ்ந்த ஆனந்தை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, லலிதாவை கைது செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.