/
சங்ககிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் 18 ஆம் தேதி சங்ககிரி நகரப் பகுதியில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சங்ககிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி மேற்கு, சங்ககிரி ரயில் நிலையம், சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனுாா், வெப்படை, செளதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூா், திருநகா் பைபாஸ்சிட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.





