/
சேலம் உடையாபட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வீராணம் மின்பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை ( மே 30) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் உடையாபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வீராணம் மின்பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செல்வா நகா், தொழிற்பேட்டை, உடையாப்பட்டி, வீராணம், இளந்தோப்பு, பிருந்தாவனம் காா்டன் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.





